உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் புதிய ஆண்டில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் 2025.12.30 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி மற்றும் பிரதேச சபை கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0