உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கேட்டுக் எல்.சமீம் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது குறித்தும் கலந்து ஆலோசித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் என்ற வகையில், இதன் போது பிரதானமாக இரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக உப தவிசாளர் கே.எல். சமீம் தெரிவித்தார்.

இதன்படி கடந்த வருடம் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழி மூல பிறப்புப் பதிவாளர் ஒருவரை நியமிக்கும் விடயத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்தல் விடயம் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜனும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0