சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய புதுவருடப்பிறப்பு.!
யாழ். மறைமாவட்ட வரலாற்று சிறப்புமிக்க செம்பியன்பற்று பங்கின் இலங்கை முழுவதும் இருந்து அதிக பக்தர்கள் வருகை தரும் உலக பிரசித்தி பெற்ற செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புதுவருடப்பிறப்பு மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் புதுவருடபிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 11:50 மணியளவில் செம்பியன்பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி தொடங்கி காலை 1:30 மணியளவில் திருப்பலி நிறைவுபெற்றது.
இவ் திருப்பலியில் பொது மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

