27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 08 பேர் கைது

கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை  பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொடை  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஓரு விபச்சார விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விபச்சார விடுதியிலிருந்து03 பெண்களும் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுக்குட்பட்ட எட்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

sumi

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

User1

மக்கள் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் தீர்வு _குகதாசன் எம்.பி மக்களிடத்தில் உறுதி

User1

Leave a Comment