27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் தீர்வு _குகதாசன் எம்.பி மக்களிடத்தில் உறுதி

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்திற்கு இன்று (07)  சென்ற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்..

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சிமன்ற முன்னால் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கிராமத்துக்கு உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளபோதும் தற்போது தேர்தல் காலம் என்ற படியால் தேர்தலின் பின் உதவிகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார்.

தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன் தை மாதத்தின் பின் வரவு செலவு திட்டத்தின் பின்னரான காலப் பகுதியில் அபிவிருத்தி வேலைகளை ஆரப்பிக்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Related posts

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில்  முஸ்லிம் பயிலுனர்கள், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல அனுமதி மறுப்பு – ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்.

User1

மில்கோ பால் மாவின் விலை குறைப்பு !

User1

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வ அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

User1

Leave a Comment