உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான, சட்டத்தரணி எப். யூ. வூட்லர், அதிக ஒலி எழுப்பப்படும் நிகழ்வுகள், திறந்தவெளி இசை நிகழ்ச்சிகள், இரவுநேர விருந்துகள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிர்வலை ஒலிபெருக்கிகள் மூலம் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இத்தகைய ஒலி மாசுபாட்டை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாகக் கருதாமல், தீவிர ஆரோக்கியச் சிக்கலாகக் கருதி பொலிஸார் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு.

குறித்த நேர வரம்புகள் மற்றும் அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன், இந்நிகழ்வுகளின் அமைப்பாளர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்கள் இத்தகைய அசௌகரியங்களை எதிர்கொண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி எண்களையோ தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான, சட்டத்தரணி எப். யூ. வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

52 0 0