மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி (பல்பொருள் அங்காடி) வெள்ளாங்குளத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (24) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி .எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் கலந்து கொண்டு கோப் சிற்றி யை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி கலையரசியும் கலந்து கொண்டார்.
குறைந்த விலையில் ஒரே கூரை கீழ் சகல விதமான பொருட்களையும் மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.












