உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொருளாதார நெருக்கடி தீவிரம் : மக்களை தாயர்ப்படுத்தும் ஈரான்!!

உலக செய்திகள் 44 நிமிடங்கள் முன்
46 பார்வைகள்

ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை மற்றும் தொடர்ச்சியான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் 93 மில்லியன் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் (மானிய விலையில்) எரிபொருள் வழங்குவது அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.4 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் நாளொன்றுக்கு சுமார் 135 மில்லியன் லீட்டர் எரிபொருளை நுகர்கிறது.

ஆனால் நாளாந்த உற்பத்தி 121 மில்லியன் லீட்டராக மட்டுமே உள்ள நிலையில் போரினால் எரிபொருள் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில்இ ஈரானிய அரசாங்கம் தற்போது மூன்று நுகர்வுத் திட்டங்களை பரிசீலித்து வருகிறது:

  1. விலையில் மாற்றமின்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்புத் தீர்ந்ததும் நிலையங்களை மூடிவிடுவது.
  2. வாகனம் வைத்துள்ளோர் மற்றும் இல்லாதோர் உட்பட அனைத்துக் குடிமக்களுக்கும் மாதத்திற்கு 30 லீட்டர் எரிபொருளை குறைந்த விலையில் வழங்குவது.

3)அனைவருக்கும் ஒரு லீட்டர் பெட்ரோலை 872,000 ரியால்கள் (சுமார் 44 சென்ட்கள்) வரை உயர்த்துவது.

ஆனால் இது மிகக் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கும் என்பதால் அரசாங்கம் எச்சரிக்கையுடன் நகர்கிறது

முன்னதாக 2019 மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போது நாட்டில் கடுமையான மக்கள் போராட்டங்கள் வெடித்தன.

இதன் காரணமாக இந்த முறை ஈரான் அரசாங்கம் கவனமாக முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் இறுதி முடிவு வரும் வாரங்களில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ!

சீனாவில் ஹியூமனாய்டு ரோபோ போட்டியில் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட சாதனையை தகர்த்துள்ளது ஒரு ரோபோ. நாகரிக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் சக மனிதரை போட்டியாளராக…

49 0 0
உலக செய்திகள்

வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்படும் : ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரானுக்கு எதிரான மிகப்பெரிய நிதிசார் தாக்குதல்களாக ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை திங்களன்று (24) அமுல்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. அதேநேரம், “பொருளாதாரப்…

86 0 0
உலக செய்திகள்

தென்னாபிரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே சுட்டுக் கொ@லை!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

52 0 0