பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின் முக்கிய கட்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலய நிர்வாகத்தினர், அறங்காவலர்கள், பக்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் பக்தி உணர்வுடன் கலந்துகொண்டனர்.
முகூர்த்தக்கால் நாட்டல் உள்ளிட்ட சமய கிரியைகள் ஆகம முறைப்படி இடம்பெற்றதுடன், மஹா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு சமய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

