இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு வரவுள்ளதாக தெளிவாக்குகிறது.
குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்கள் என்பவற்றுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.