மலைநாட்டின் பல பகுதிகளில் கன மழை!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நுவரெலியா நானுஓயா டயகம அக்கரபத்தனை லிந்துளை தலவாக்கலை மெராயா கொட்டகலை ஹட்டன் டிக்கோயா பொகவந்தலாவ நோர்வூட் புளியாவத்தை மஸ்கெலியா நல்லதண்ணி சாமிமலை வட்டவளை கினிகத்தேன நோட்டன் ஆகிய பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து காட்டாறுகள் ஓடைகள் மற்றும் நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.மேலும் அதிக நீர் வரத்து காரணமாக மலையக பகுதியில் உள்ள மவுஸ்சாகலை காசல்ரீ நீர் தேக்கங்கள் தவிர்ந்த ஏனைய நீர் தேக்கங்களின் நீர் வான் கதவுகள் வழியாக வெளியேறுகிறது.
இதன் காரணமாக களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையை அன்னமித்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இப் பகுதியில் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக மலையக பகுதியில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் வாகனங்களில் மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் ஹட்டன் கொழுப்பு பிரதான சாலையில் போக்குவரத்து செய்யும் போது வாகனங்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறும் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் திட்டுகள் நிறைந்து காணப்படும் பகுதியில் மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.







