உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையை இலக்கு வைக்கும் இணையவழி மோசடி!!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
61 பார்வைகள்

இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்படுபவர்களின் விபரங்களை முன்னதாகவே திரட்டும் மோசடிக்காரர்கள், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் ‘Hi’ என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.

எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0