உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
22 பார்வைகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) மன்னார் கிளை வளாகமானது இன்றையதினம் திங்கட்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை கடந்த 14 வருடங்களாக மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த நிலையில் தற்போது அதியுயர் வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அசங்க பண்டார தென்னகோன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வமத தலைவர்கள் ஆசியுடன் குறித்த வங்கி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

21 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

51 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

63 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

44 0 0