உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!

உலக செய்திகள் 18 மணி நேரம் முன்
68 பார்வைகள்

வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100  டொலர்களை விஞ்சியுள்ளது.

இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன், புதிய பணவீக்க அதிர்ச்சி குறித்த அச்சங்கள் மீண்டும் எழுந்தன.

இதன் விளைவாக, வெள்ளிக்கிழமையன்று (24) ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன.

ஈரானுடன் தொடர்புடைய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான மத்திய கிழக்கின் இரண்டாவது முக்கியப் பாதையை முடக்கியதாலும் (ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட மூடியிருந்த நிலையில்), பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே இரவில் 7% உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவாக பீப்பாய் ஒன்றுக்கு 102 டொரை எட்டியது.

பின்னர் அது 100.85 டொலர் என்ற நிலையில் நீடித்தது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்தம் நடைமுறையில் முறிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரை ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அதேவேளையில், அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள அண்டை அரபு நாடுகள் மீது ஈரானும் தாக்குதல்களை நடத்தியது.

மோதல் தணிவதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி நீடிப்பதால், இந்த மாதத்தில் மட்டும் ‘ப்ரெண்ட்’ Brent) மசகு எண்ணெய் விலை கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக…

20 0 0
உலக செய்திகள்

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்கா பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் : ஈரான் எச்சரிக்கை!

தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் “கள யதார்த்தங்களைப்” புறக்கணித்துவிட்டு, 2028 தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத்…

96 0 0
உலக செய்திகள்

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி…

49 0 0