புதிய கடற்படைத் தளபதி டேமியனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வாழ்த்து!
இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவை இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கைக் கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நினைவாக, கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடற்படை சார் விடயங்கள் குறித்து சுருக்கமாகக் கலந்துரையாடினர்.