உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

பயிர்களை கால்நடைகள் அழித்தமையால் ஏற்பட்ட தகராறு; ஒருவர் கொ*லை.!

93 பார்வைகள்

தனது கால்நடைகள் மற்றுமொரு நபரால் செய்கையிடப்பட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்தமையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹுங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது கால்நடைகளால் அழிக்கப்பட்ட பயிற்றங்காய் பயிர்களுக்கான இழப்பீட்டினை வழங்குவதற்காக குறித்த நபர், சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்த சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

49 0 0
இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

51 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

50 0 0