உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
68 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அந்த அமைப்பின் ஸ்தாபகர் டேஷ் பாலசுப்ரமணியம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் முதல் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீற்றர்  நீளமான சைக்கிள் பயணத்தை, ஆஸ்திரேலியப் பிரஜைகள் உட்பட்ட ‘நூல்’ அமைப்பின் தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பயனுள்ள பயணங்கள் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதுடன், பயணத்தின் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் வெளிநாடுகளில் வாழ்ந்த மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த உதவிகளின் ஊடாகவே இங்கு அவசியமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய செயற்பாடுகள் அடுத்த ஆண்டும் ஜூலை மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் டேஷ் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிராந்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு, கல்வி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தும் நீண்டகால இலக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0