உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பணிகள் மாலை 6 மணியுடன் நிறைவடைகின்றன என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ் நிலையங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

எனினும் தற்போது ஆளணி பற்றாக்குறை நிலவுவதனாலேயே இவ்வாறு இலங்கை பொலிஸ் நிலைப்பாடு உள்ளது என அங்கலாய்க்கிறார்கள்.

ஆனால் காரைதீவு பொலிஸ நிலையம் கடந்த 2021 ஆண்டு மக்கள் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று ஒத்துழைப்புடன் இயங்கிய போதிலும் மக்கள் தற்போது குறை கூறும் வகையில் பொலிஸ் நிலைய செயல்பாடு அமைந்துள்ளது.

மேலும் டிக்வா சூறாவளி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட எதிர்பாராத காலநிலை காரணமாக காரைதீவு பொலிஸ் நிலைய பெயர்ப் பலகை சேதமடைந்தது.

குறித்த பெயர்பலகை அகற்றப்பட்டு பல மாதகாலமாகும் நிலையில் அவை மீண்டும் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் இன்று வரை பொலிஸ் நற்சான்றிதழ், முறைப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட சிவில் விடயங்களுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தை அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகின்றனர்..

காரணம் இன்று வரை காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கான விளம்பர பலகை இன்மை

இந்த விடயத்தில் காரைதீவு பிராந்திய நிறுவனங்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0