உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழைவீழ்ச்சியினால் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி முதல் நாளை (13) சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதாலம் நிலை (மஞ்சள் நிற எச்சரிக்கை) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
களுத்துறை மாவட்டம்
பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவு.

கண்டி மாவட்டம்
தொழுவை பிரதேச செயலகப் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டம்:
பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடகவெல, கலவானை மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

நுவரெலியா மாவட்டம்
அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்கள், நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், ஊற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது வற்றிப்போதல் போன்ற ஏதேனும் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0