புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டம்!
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை உச்சநிலைக்குக் கொண்டு வருவதற்கு, எரிசக்திச் சேமிப்பு அமைப்புகள் (Energy Storage Systems) அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதற்கு ஏதுவாக, தேசிய மின் விநியோக வலையமைப்பை (National Power Transmission Network) விரிவாக்கம் செய்யவும், தற்போதுள்ள நீர்மின் நிலையங்களின் திறனை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.