யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு.!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.