• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பாதுகாப்பு குறைபாடே உள்ளது!

selvan by selvan
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பாதுகாப்பு குறைபாடே  உள்ளது!
Share on FacebookShare on Twitter

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட மிக மோசமான ‘பாதுகாப்பு குறைபாடு’ மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையின் விளைவே தவிர, இதன் பின்னணியில் எந்தவொரு தனிப்பட்ட ‘மகா சூத்திரதாரியும்’ கிடையாது.” -என்று பிரபல சட்டத்தரணி மைத்திரி குணரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் நிலவும் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பலவீனங்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தக் கோரத் தாக்குதல் நடப்பதற்கு 21 நாள்களுக்கு முன்பே, குறிப்பிட்ட ஒரு நாளில் இவ்வாறானதொரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்று அரச புலனாய்வுச் சேவைக்கு மிகத் துல்லியமான இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை உடனடியாகப் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பியிருந்தனர். அவர் மூலமாக அந்தக் கோப்பு அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபர், அந்த அத்தியாவசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்பை வெறும் ‘தகவலுக்காக’ எனக் குறிப்பிட்டுத் தனது கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தாரே தவிர, தேவாலயங்களையோ அல்லது பொதுமக்களையோ பாதுகாப்பதற்கான எந்தவொரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” – என்றார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தார் என்று எழும் வாதங்களை தர்க்கரீதியாக அணுகிய மைத்திரி குணரத்ன,

“சுரேஷ் சலேதான் இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தீட்டினார் என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் கூட, சர்வதேச ரீதியாகக் கிடைத்த துல்லியமான எச்சரிக்கத் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்திருந்தால், இந்தத் தேசியப் பேரழிவைத் தடுத்து 270 இற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.” – என்றார்.

“தற்போதைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துச் சுயாதீன விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்தத் தாக்குதலின் ‘மகா சூத்திரதாரி’ என அடையாளப்படுத்தப்படுபவர்கள் அரசியல் தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரமும் அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பற்ற தன்மையால் நேர்ந்த ஒரு பேரழிவே என்று சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்தார்.

Related Posts

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 9, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி