உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோயிலில் இடம்பெற்ற விசம செயல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் மற்றும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் ஆகியவற்றின் தர்மகர்த்தாவாக பெரும் தொண்டாற்றி சிவபதம் அடைந்த மதிப்பிற்குரிய சிவப்பிரகாசம் கயிலைநாதன் ஐயா அவர்களின் நினைவுக்கல் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் வப்பிரகாசம் கயிலைநாதன் ஐயாவின் திருவுருவ படம் அடங்கிய கருங்கல் நினைவுக் கல் ஒன்றினை நிறுவியிருந்தார்கள்.

இன்று அந்த நினைவுக்கல் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயலாகும்.

ஒரு ஆலயத்தில் இடம்பெற்றுள்ள இத்தகைய செயல், அந்த நபரின் சேவையை மட்டுமல்லாது ஆலயத்தின் புனிதத்தன்மையையும் அவமதிக்கும் செயலாகும். கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நினைவுச் சின்னங்களை சேதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இச்செயலை அனைவரும் கண்டிப்பதுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாளின் பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த செயற்பாடு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0