உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
16 பார்வைகள்

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (08) இரவு சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பமுணுவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸாகேவத்த சந்திக்கு அருகில் பொலிஸாரினால் விசேட வாகன சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டதில், அதிலிருந்து 510 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காரில் வந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயணித்த காரையும் பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0