நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீதான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு கையெழுத்து வேட்டை!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவரும் நோக்கில் கையெழுத்து வேட்டையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது கம்பன் கழகத்தின் முக்கியஸ்தர் கம்பநேசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய இணைய வழி மூலம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதாவது கையொப்பத்தை பதிவு செய்பவர் தனது முதற் பெயர், இறுதி பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை என்பவற்றை உள்ளிடுவதன் மூலம் தமது கையொப்பங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கையொப்பம் பதிவு செய்ய பணம் செலுத்த தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.