புத்தூரில் விபத்து – இளைஞர் பலி, இருவர் காயம்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நேற்றிரவு மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்த நிலையில் புத்தூர் கிழக்கை சேர்ந்த வாசன் கஜாணன் (வயது 21) என்ற இளைஞர் இன்று அதிகாலை சாவாடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்




