உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் கடற்படையில் உத்தியோகபூர்வமாக இணைந்தது ‘சமுத்ரவிஜய’ கப்பல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கைக் கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தால் கடந்த 2025 டிசம்பர் 2 ஆம் திகதி இந்தக் கப்பல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. கடற்படையின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள கடலோரப் பாதுகாப்புக் கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி இது தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்தக் கப்பலின் வருகையானது இலங்கையின் கடல்சார் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, பிராந்திய சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச கடல்சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியமானதொரு வளமாக அமையும்.

இந்நிகழ்வின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கயான் விக்கிரமசூரிய, கப்பலை உத்தியோகபூர்வமாகப் பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து, கப்பலின் பெயர்ப் பலகை மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, கப்பலில் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.

இதன்போது கப்பலின் செயற்பாட்டுத் தயார்நிலை குறித்து கடற்படைத் தளபதி விளக்கமளித்தார். மேலும், விசேட விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை பதிவிட்ட ஜனாதிபதி, கப்பலின் பணியாளர்களுடன் குழுப் படத்திலும் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமெரிக்க பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ் உள்ளிட்ட அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளும், இலங்கை தரப்பில் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் காஞ்சன பானகொட, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0