உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும், பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தால் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது மாணவர்கள் எவ்வித அசௌகரியங்களையும் எதிர்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, தகுதியுடைய மாணவர்கள் தாமதமின்றித் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துமாறு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என இருதரப்பினரும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவது அவர்களது பொறுப்பாகும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

53 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0