உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் நீண்டகால தேவையாக காணப்படுகின்ற பொது நோக்கு விளையாட்டு உள்ளரங்கு அமைக்கும் கோரிக்கைக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் R.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான முன் ஆய்வு வேலையாக நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்திக் குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

அங்கு பாடசாலை சமூகத்துடன் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி

கல்லூரிக்கு ஒரு நவீன Multi-Purpose Sports Hall அமைக்க வேண்டிய தேவை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான இந்தத் திட்டம், வடமராட்சி மாணவர் சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கௌரவ அமைச்சர் சந்திரசேகர் அவர்களின் அழைப்பின் பேரில், வடமராட்சி ஹாட்லிக் கல்லூரிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தேன். சுமார் 140 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இந்த மகத்தான செயற்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமன்றி, வடமராட்சிப் பகுதியின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்கும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணனும் சென்றிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0