உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 20 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜேர்மனி மக்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுசரணையில், (international Human Rights Global Mission) அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்தியசாலைக்குத் தேவையான இந்த மருத்துவ உபகரணங்கள் இன்றைய தினம் (3) வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நோயாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இயன்முறை மருத்துவ (Physiotherapy) உபகரணங்கள்,சேலன் தாங்கிகள்,ஊன்று கோல்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த மருத்துவ உபகரணங்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடமிருந்து வைபவரீதியாக பெற்று கொண்டார்.

முன்னதாக, சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் ஒழுங்கமைப்பில் சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

38 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

39 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

56 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0