டிக்கோயாவில் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி சேதம்!
டிக்கோயாவில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மரக் கிளை ஒன்று முறிந்து முச்சக்கர வண்டியின் மீது விழுந்துள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் டிக்கோயா சலங்கந்தை பட்ல்கல பிரதான வீதியில் இடம் பெற்று உள்ளது.
சலங்கந்தை பகுதியில் இருந்து பட்ல்கல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் மீது பட்ல்கல பிரதான வீதியில் உள்ள வாகை மர பாரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது.
இதில் உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை. எனினும் முச்சக்கர வண்டி பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.




