உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறுமியொருவர் துஷ் – பிரயோகம்; தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகிரவகந்த பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துஷ்பிரயோகத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சகோதரரான தேரரே மேற்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி பகிரவகந்த பகுதியில் சந்தேகநபரான தேரர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருக்கும் 25 வயதுடைய தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த துஷ்பிரயோக சம்பவத்திற்கு ஆதாரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் அன்றைய தினமே பகிரவகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தேரரும், பெண்ணும் கடந்த 21ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரான தேரரை இன்றையதினம் ஜுன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் தலா 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0