கோர விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு.!
மீகொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெசாக் தானசாலைக்கு அருகில் கூடிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துடன் மேலும் 7 பேர் காயமடைந்தநிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். அத்துடன் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹோமாகம, மீகொட பகுதியில் வீதியில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வெசாக் தானசாலை ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 மற்றும் 58 வயதுடைய மூன்று ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.