துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒருவர் கைது.!
துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒருவர் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தல்பே, ஹபராதுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கெதர பகுதியில் காரில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (23) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.