யாழ்.மருதங்கேணி பொலிஸார் இன்று களவிஜயம்!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு மருதங்கேணி மாமுனை கிராமங்களில் மருதங்கேணி பொலிஸ் பிரிவினரால் விசேட கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது
குறித்த விஜயத்தின் போது நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தேடப்படும் சந்தேக நபர்கள், அடையாள அட்டை இல்லாத நபர்கள் மற்றும் மக்களின் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
குறித்த கள விஜயத்தில் மருதங்கேணி பொலிசாருடன் பருத்தித்துறை பொலிஸ் பிரிவினரால் நெல்லியடி போலீஸ் பிரிவினர் என காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பல பொலிசார் கலந்து கொண்டனர்


