உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிரிட்டன் கல்விச் செயலாளருடன் பிரதமர் ஹரிணி விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அந்நாட்டின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து இருதரப்புக் கல்வி ஒத்துழைப்புகள் குறித்துப் பாரியளவில் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே வலுவான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிசெய்தல், மற்றும் மாணவர்கள் – கல்வியாளர்களுக்கான புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.

மேலும், இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் நவீன ஆராய்ச்சித் துறைகளில் புதிய கூட்டு முயற்சிகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பிரிட்டன் அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் தற்போது வெற்றிகரமாக நடைமுறையிலுள்ள ‘செவ்னிங்’ புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்களைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

இத்தகைய உயர்தரப் புலமைப்பரிசில் திட்டங்கள், இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையே நீண்டகால கலாச்சார மற்றும் கல்விசார் தொடர்புகளை வளர்ப்பதற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பதைப் பிரதமர் இச்சந்திப்பில் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு உத்திகளுக்குப் பிரிட்டனின் நவீன கல்வித் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி அனுபவங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த இராஜதந்திரச் சந்திப்பில் இரு தரப்பாரும் பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

66 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

62 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0