உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மீண்டுமொரு பயங்கர பொருளாதார நெருக்கடி; சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுக.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“நமது நாடு மீண்டுமொரு படு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இன்று (நேற்று) எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.

வேகமாகச் சரிந்துவரும் இலங்கை ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசின் துண்டுவிழும் செலவீன அழுத்தங்கள் மற்றும் சந்தையில் பெருகிவரும் கடுமையான பொருளாதார நிச்சயமற்ற தன்மை என்பன இனியும் ஏதோவொரு தனிப்பட்ட தரப்பையோ அல்லது ஒரு பகுதியை மட்டுமோ பாதிக்கும் பிரச்சினையாகக் கருத முடியாது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிக்கும் பாரிய ஆபத்தாகும்.

எனவே, நாட்டின் இந்த அபாயகரமான பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்து, மக்கள் மீண்டும் ஒருமுறை வீதிகளுக்கு இறங்குவதற்கு முன்பாக, இதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை ஒன்றிணைந்து வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதற்காக, துரிதமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறைப்படி வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, இந்தச் சர்வகட்சி மாநாட்டை விரைவாகக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0