நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!
நுவரெலியா மாவட்ட நலிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரால் கடந்த 19ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து பொது மக்களுக்கு அஸ்வெசும, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கக்கூடிய சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு செய்வதற்கான பாத யாத்திரை மற்றும் வீதி நாடகம் நடைபெற்றது.
இந்நிகழ்வு நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான வீதி ஊடாக வருகை தந்து தபால் நிலையத்தின் முன்னால் சுற்றுவட்டத்தின் ஊடாக தபால் நிலையத்தில் முன் இவ்வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இதன்போது மக்களுக்கு அரசினால் வழங்கக்கூடிய சேவைகளை எவ்வாறு கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு சம்பந்தமாக அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள் அஸ்வெசும கிடைக்கப்பெறாத பயனாளிகள் பங்கேற்று இருந்தனர்.




