உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகின்றார் மஹிந்த.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மனோஜ் கமகே,
“கபில சந்திரசேன தாம் வழங்கிய வாக்குமூலமானது அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தின் பேரில் பெறப்பட்டது என ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோதமான வாக்குமூலத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அது பாரதூரமான விடயமாகும்.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ கேள்விகளைக் கண்டு ஒருபோதும் ஓடி ஒளிபவர் அல்லர். அவர் நிச்சயம் இன்று ஆணைக்குழுவில் ஆஜராவார். ஆனால், அச்சுறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அதற்கு எதிராக உரிய தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்த இந்த விசாரணை அழைப்பாணை இலங்கையின் அரசியல் மற்றும் சட்டத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0