நீர் ஏந்து பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த பல மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவியதால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் சற்று உயர்கிறது.
இம் மழை காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஊற்றுகள் ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் வீழ்ச்சிகளில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மழை பெய்யும் வேளைகளில் நீர் தேக்கங்களுக்கு நீரை வழங்கும் சாமி மலை ஓயா, மறே ஓயா, சியத்தல கங்குல ஓயா,காட்மோர் ஓயா, காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான பொகவந்தலாவ ஓயா, கெசல்கமு ஓயா ,ஹட்டன் ஓயா தலவாக்கலை பகுதியில் உள்ள மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான மகாவலி கங்கை ஆகிய வற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மாலை வேளையில் கன மழை பெய்யும் போது ஆற்று பகுதியில் நீராடுவதையும் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.