கைக்குழந்தைகளின் எலும்பு எச்சங்கள் மீட்பு!
அரியாலை செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணியின் 10வது நாளான இன்று(7) 2 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.
மொத்தமாக இன்றுடன் 254 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக 259 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று எடுக்கப்பட்ட தில் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தையின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை, மூன்றாம் கட்டத்தில் 14 சான்றும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சான்றுப் பொருட்களாக தங்க வடிவிலான உடைந்த துண்டு ஒன்றும், நாணயக்குற்றிகளும், எடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 96 சான்றுப் பொருட்களை இதுவரை மீட்கப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது