உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அடிப்படை வசதிகள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடாத்த வேண்டாம் !!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
17 பார்வைகள்

வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடாத்தும் போது போட்டியாளர்களுக்கும் பங்கு கொள்ளும் அதிகாரிகளுக்கும் உகந்த விளையாட்டு மைதானத்தை தெரிவு செய்யவேண்டிய பொரறுப்பு ஹட்டன் வலய அதிகாரிகள் கையில்.

ஹட்டன் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வழங்க பட்ட விளையாட்டு மைதானத்தில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அசெளகரியம். ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்று வந்ததை தொடர்ந்து

ஏனைய போட்டிகள் அம்பகமுவ மைதானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற மாணவர்கள் மைதானத்தில் அடிப்படை வசதியின்றி பாரிய சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

கினிகத்தேன அம்பகமுவ சிங்கள பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கழிவறை வசதிகளோ குடிநீர் வசதிகளோ இல்லாத நிலையில் இவ்வாறான போட்டிகளை நடத்துகின்றமையினால்
மாணவர்களும் ஆசிரியர்களும் பாரிய அளவிலான அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துவது சம்பந்தமாக ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

49 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0