மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.!
தலத்துவோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் 83 வயது மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி அன்டனாவுடன் இணைக்கப்பட்டிருந்த அறுந்து விழுந்த மின்கம்பியின் மீது கால் வைத்தமையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.