உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குப்பை வீசிய நபர் ; தட்டிக்கேட்ட இளைஞனை ‘சண்டியர்’ பாணியில் மிரட்டல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

பொது இடங்களை அசுத்தப்படுத்தும் செயல்களைத் தட்டிக்கேட்கும் சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கல்முனையில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​கல்முனை தோனா அடியில் (தோனா ஓரம்) நபர் ஒருவர் மிகவும் பகிரங்கமாக, எவ்வித அச்சமுமின்றி குப்பைகளைக் கொட்டியுள்ளார்.

இதனை அந்த இடத்திலிருந்த இளைஞர் ஒருவர் கவனித்து, உடனடியாகச் சென்று அவரை மறித்துள்ளார்.
​”நீங்கள் பொது இடத்தில் இப்படிச் செய்வது சரியா? இது சட்டவிரோதமானது இல்லையா?” என்று அந்த இளைஞர் மிகவும் நியாயமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

​இதற்குப் பதிலளித்த அந்த நபர், தனது தவறை உணர்ந்து வருந்துவதற்குப் பதிலாக, மிகவும் திமிரான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

“நான் இப்படித்தான் செய்வேன், உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு, ஒரு சண்டியரைப் போல அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

​தற்போது கல்முனை மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் நகரைச் சுத்தமாக வைத்திருக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இவ்வாறான பொறுப்பற்ற மனிதர்களின் செயல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​பொது இடங்களில் கழிவுகளை வீசுவதும், அதனைத் தட்டிக்கேட்பவர்களை மிரட்டுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய நபர்களை அடையாளம் கண்டு உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

37 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0