உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உடல்நலம் விசாரித்த அனைவருக்கும் ரணில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தனது அறுவைச் சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“எனது அறுவைச் சிகிச்சையின் போது எனது உடல்நலம் குறித்து விசாரித்து ஏராளமான குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. நான் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததை நான் அறிவேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றார். அவர் விரைவில் முழுமையான உடல்நலத்துடன் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வேண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் விசேட சமய வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

53 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0