உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தல்; 22 பிக்குகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கைப்பற்றப்பட்ட 110 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஸ்’ ரக போதைப்பொருட்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியை வழங்கியவர்கள் யார்? இந்தப் பாரிய கடத்தல் பின்னணியில் இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு எது? இந்தச் சதித்திட்டத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆகிய கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இளம் பிக்குகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

17 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0