மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழா.!
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் சித்திரை புத்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்.எச்.ஈர்ஷாட் அவர்களின் தலைமையில் இன்று (26) காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் வைத்திய கலாநிதி அசேல பெரேரா விஷேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் பிரிவில் இருந்து விசேட வைத்திய நிபுணர் ரந்தெனிய, வைத்திய கலாநிதி பிரபாஷர ஆகியோருடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி, சுகாதார அத்தியட்சகர் பிரிவில் உள்ள அனைத்து தாதியர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவிகள் மற்றும் சமனேலிய வித்தியாலய மாணவ மாணவியர்களின் வரவேற்பு நடனத்துடன் அதிதிகள் அழைத்து வரபட்டனர்.
சுப வேளையில் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சித்திரை புத்தாண்டு சமய நிகழ்வுகள் சுமனாராம விகாரையின் பௌத்த மதகுரு மற்றும் கிறிஸ்தவ மதகுரு, மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளிவாயில் மதகுரு, இந்து மதகுரு அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது.
சுமார் 6 கிலோமீற்றர் தூரம் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இதில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏனைய சகல போட்டிகளிலும் இடம்பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
