உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (25.04.2026) எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.394,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.362,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.49,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.45,312 ஆகவும் நிலவுகிறது.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மத்திய கிழக்கு போர் ஆரம்ப காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.


தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,708 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் உள்நாட்டிலும் தங்க விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0