சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக டி.எஸ். இந்திக பதவியேற்பு.!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். இந்திக இன்று (26) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுப நேரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். இதற்கு முன் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இப்பதவி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கடந்த 23ஆம் திகதி தனது 38 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.டி. சில்வாவும் இடமாற்றம் பெற்றுசென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டி.எஸ். இந்திக நியமிக்கப்பட்டுள்ளார்.