குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு.!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (24) தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 34 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், மரண விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் இடம்பெற்றன.
விசாரணையின் பின்னர், தூக்கினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு உயிரிழந்தவர், வீரமுனை 3 பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் கிருஷ்ணராஜ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு வயது குழந்தையின் தந்தையான இவர் மதுப் பழக்கத்திற்கு உட்பட்டவராக இருந்ததுடன், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில்ஈடுபட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.